அன்பினை விதைப்போம்


வாழ்க்கை என்பது ஒரு தரம்

அதில் எதுவுமில்லை நிரந்தரம்

பிணக்கிருந்தால் பகை வளரும்

கணக்கிலடங்கா இடர் தொடரும்


அன்பு ஒன்றே சுகம் தரும்

அதுவே நட்புக்கு பாலமிடும்

ஒருவருக்கொருவர் உதவிடுவோம்

உண்மை இதனை உணர்ந்திடுவோம்


வாழ்வது எத்தனை நாளாயிருந்தாலும்

அத்தனை நாளும் அன்பினை விதைப்போம்

எத்தனை இடர் நமைத் தொடர்ந்தாலும்

பிரியோம் இணை பிரியோம் ஒரு நாளும்

1 Response
  1. Anonymous Says:

    Wow... Good one....


Post a Comment