திறக்குமே அந்த சொர்க்கக் கதவு



பீடுநடை போடுதே என் மனம் - அன்பே

உனை நான் கண்ட மறு நிமிடம்

ஆற்றங்கரையோரம் நானமர்ந்த நேரம் - அன்பே

நீயின்றி என் மனம் கொண்டதே பெரும் பாரம்


பாரிஜாத வாசம் கூந்தலோரம் பேசும் - அன்பே

மின்னல் உந்தன் சிரிப்பில் மெய்மறந்து போகும்

உந்தன்விழியோரம்உருவாகும்புது ராகம்-அன்பே

கண நேரம் என் நெஞ்சில் அது சிந்து கவி பாடும்


என் ஈர விழியோரம் - அன்பே

உன் நினைவு என்றும் ஆடும்

உன் நினைவு மறையும் நேரம் - அன்பே

என் மூச்சும் நின்று போகும்


நாம் வாழும் காலமோ குறைவு - அன்பே

நமக்குத் தேவைதானா ஒரு பிரிவு

நாம் கொள்ள வேணும் மேலும் பரிவு - அன்பே

கொண்டால் திறக்குமே அந்த சொர்க்கக் கதவு
0 Responses

Post a Comment