திரும்பிப் பார்க்கிறேன்

அது ஒரு கனாக்காலம்

அன்று புத்தகங்களை

மட்டுமா சுமந்தேன்



நெஞ்சைத் தொட்டுச்சென்ற

நிழலானவளையும்

அல்லவா சுமந்தேன்



காலம் உருண்டது

கனவுகள் கலைந்தது

நீர்த்து போனதென் உறவுகள்



அதோ அங்கே சுமைகளாய்

தூசிகளுக்கு இடையே

புதைந்து கிடக்கிறது



புத்தகங்கள் மட்டுமல்ல

நிறைவேறாமல் போன

என் கனவுகளும் தான்



கானல் நீரானவளை

நினைக்கும் போதெல்லாமொரு

சன்னமான குரல் தடுக்கிறது



சன்னமான குரலுக்கிசைந்தே

சலனமின்றி ஓடுகிறதென்

சம்சார சாம்ராஜ்யம்
0 Responses

Post a Comment