தவக் கோலம்

ஓடும் வரை ஓடு

ஆடும் வரை ஆடு

பாடும் வரை பாடு

போகும் வரை ஓடு ஆடு பாடு


அழுதே பிறக்கும் மானிடா

அழுகப் போவதும் நீயடா

அழவைப்பார் உனை சிலரடா

அவரழுகப்போவதும் இம்மண்ணிலடா


மண்ணில் நிலைப்பதோ சிலகாலம்

அறியா மானிடர் புரிவதோ மர்மஜாலம்

வீணாக செல்வதோ பொற்காலம்

அவரென்றும் பெற முடியா தவக்கோலம்

1 Response
  1. Kannan Says:

    அருமையான கவிதை


Post a Comment