வீறு கொள்ளும் முன் நீ மாறிவிடு

என்னிடமிருந்து வெகு தூரம் விலகிவிட்டாய்

எதைக்கண்டு என்னிடமிருந்து பிரிந்தாய்

எப்போதும் போலவே தான் நானிருக்கின்றேன்

எப்படி இப்படி மாறினாய் என வியக்கின்றேன்


அறிமுகம் ஆனப் பொழிதிலிருந்து இதுவரை

நம்முள் பிறந்ததில்லையே எதிர்மறை

ஆண்டுகள் பல கடந்து அந்நியோன்னியம்

ஆகர்ஷ நிலை வந்த பின்பு அனிச்சமானதேன்


இயற்கையை இயல்பாய் மதித்த மனிதா

இடம் மாறி தடம் புரண்டு செயலறியா

இடர் தந்து இயற்கை வளங்களை அழிக்கின்றாயே

நான் வீறு கொள்ளும் முன் நீ மாறிவிடு
0 Responses

Post a Comment