நெருங்கிப் பழகாதே நெஞ்சமே

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ

நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே

ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது

ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ


தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது

தடம் புரண்டு போனா அது தப்புடா

சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது

சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா


வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது

கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடா

நல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது

கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு