முக வரியை முன்னெடுத்து வா

உன் வரவை எண்ணி


ஓரத்துப் பார்வையில்


ஈர மனதுடன்


ஒவ்வொரு நிமிடமும்


உனக்காகவே காத்திருக்கின்றேன்



உள்ளத்துப் பூக்கள்


உலா வரும் சமயங்களில்


உன் நினைவலைகளே


என்னுள் ஜீவனை


ஒளிர்விக்கின்றது



நீ இல்லாத சமயங்களிலும்


என்னுள் ரசவாத


மாற்றங்களை


நீ நிகழ்த்துகின்றாயே


நீ என்ன மந்திரவாதியா



உன் புன்னகைப் பூக்களை


என்னிடம் விட்டுச் சென்றதால்


என் புன்னகை வங்கியில்


சேமிப்பு அதிகமாகிவிட்டிருக்கின்றது



பற்று வரவு


இரண்டும் நிகழ்ந்தால் தானே


பரிவர்த்தனை முற்றுப் பெறும்


என் சிந்தாத சிரிப்புத்துளிகளை


சீக்கிரம் உன்னுள் பதிய வா



முற்றுப் பெறாத


என்பயணத்திற்கு


முற்றுப் புள்ளி வைக்க


முக வரியை முன்னெடுத்து வா
2 Responses
  1. அருமை வாழ்த்துக்கள்



Post a Comment