வெளிச்சத்தைத் தேடி


வெளிச்சத்தைத் தேடி


வெட்டவெளியில்


வெகு நாளாகத் தேடுகிறேன்


வேதனைத் தான் மிச்சம் .




இருள் சூழும் உலகில்


என்னையும் படைத்து


இவ்வுலகில் எனை


இறக்கியதன் காரணமறியேன்.




எனை சூழ்ந்த மனிதர்கள்


என் மேல் இரக்கங் கொண்டு


என் கைப் பற்றி வழி நடத்தும்


என் பயண தூரம் அறியேன் .




ஏழு வண்ணங்கொண்டதாம்


எழிற் வானவில் வானில்


எழும்போதெல்லாம்


என்னிடம் பகின்றென்ன பயன்.




அடுக்கடுக்காக நிறங்களை சொல்லி


ஆசையைத் தான் தூண்டுபவரே


ஆரேனும் அவ்வண்ணமதை நான்


அண்மையில் காண வழி சொல்வீரோ




தாயையும் தந்தையையும்


தரணியில் வாழும் மற்றோரையும்


தாமதமின்றி நான் காணும் நாள்


எந்நாளோ அறியேன் அறிவீரோ நீர்
2 Responses
  1. அருமை வாழ்த்துக்கள்


  2. warrior Says:

    nan theedi kondu irrukum Vidial-ai intha kavithai valiya kanden,
    nan thinamum enni thavikkum vazhikkiyai intha kavithai mulai parikirrren...........

    Nanrigal koodi....


Post a Comment