புதுக் கோலம்

எங்கும் அழகிய மாக் கோலம் - இன்று

குங்குமச் செல்விக்கு மணக் கோலம்

பொங்கும் இசை வெள்ளம் மிதந்து வர

என் கண்மணி கொண்டாள் புதுக் கோலம்



பூக்கள் சூழ பூவை வந்தாள்

இமைக்கும் விழியினில் பாக்கள் தந்தாள்

நாயகன் அருகே வந்தமர்ந்தாள்

நாணத்தில் கண்கள் சிவந்திருந்தாள்



வேதங்கள் காற்றினில் முரசொலிக்க

தேவர்கள் மூவர்கள் வந்து நிற்க

வந்தவர் யாவரும் வாழ்த்துரைக்க

நாயகன் மங்கள நாண் சூட



கண்ணே உன்னைக் காணக் காண

நெஞ்சில் இன்பம் பொங்குதம்மா

பெண்ணே புகுந்த வீட்டில் - நீ

புகழை வளர்க்க வேண்டும்மம்மா



கணவன் செல்லும் வழியினிலே

நீயும் செல்ல வேண்டும்மம்மா

கணவன் வழி நீ நடந்தால்

என்றும் காண்பாய் திருநாளம்மா

வாகை சூடும் நேரமிது

வாகை சூடும் நேரமிது இரு மயில்கள்
தோகை விரித் தாடும் கால மிது
இனிக் கார்க் காலம் தான் - இதயந்தனில்
இனிய போர்க்கோலம் தான்

வானத்து மின்னல் தான் புன்னகையோ - அர்ச்சுனன்
வில் தான் இவள்தன் புருவமோ - கேள்விக் குறிதான்
வஞ்சியின் செவி மடலோ - வண்டு தான் விழியோ
வாழைதான் உடலோ , குயிலோசை தான் குரலோ

நடையினில் தவழ்ந்திடும் சலங்கையொலி
தென்றலில் மிதந்திடும் புன்னகை
யொலி நுழைந்ததே தேவனின் மனதிலே
நங்கையோ இன்ப வெள்ளத்திலே

விழிகளுக்கிடையே மொழிகள் தூது செல்ல
இரு கரம் மெல்ல படர்ந்து கொள்ள
காதல் ஜோடி ஒன்று இன்று , மெல்ல
கவிதைகள் ஆயிரம் படைத்ததம்மா

என்ன செய்யப் போகின்றாய்

ஒவ்வொரு முறை

கண்ணாடியைப் பார்க்கும் போதும்

பெருமிதம் கண்களில்

பெருகி மனம் நிறைகின்றதே


ஒவ்வொரு அவயங்களையும்

கவனமாக அழகுபடுத்துவ தென்ன

கவின்மிகு தோற்றம்

ஏற்றம்பெற மெனக்கெடுவ தென்ன


மனிதநேயம் மறந்த மனிதனே

இவ்வுலக முனக்கு நிரந்தரமோ

விடுமுறைக்குத் திட்டமிடும்நீயே

விடுமுறை முடிந்தபின் செல்லுமிடமேதோ


கண் கொடுத்தான்

விழியிழந்தோர்க்கு விழியாய்ச் செயல்பட

செவி கொடுத்தான்

செவித்திறன் குறையுடையோர்க்குச் சேவைசெய்ய


கைகளைப் படைத்தான்

கரமிழந்தோர்க்கு வலுசேர்க்க உதவியாய்

கால்களைக் கொடுத்தான்

காலாக கால்களற்றவர்க்குச் செயல்பட


ஒற்றைருபாய் சுண்டிவிட்டு

ஓராயிரம் ருபாய்ச் செலவிட்டதாய்த்

தர்மசீலன் பட்டம்தேடி

பகலிலும் நீயிங்கு நடிக்கின்றாயே


படைப்பின் காரணம் அறி

அங்கங்கள் முடங்கும்முன் விழி

இதுவரை என்னசெய்தாய்

இனியென்ன செய்யப் போகின்றாய்


விழி! எழு! செய்!

ஒரு ஐநூறு ரூபா






ஒன்னாம்
வகுப்பு முதலே

ஒன்னாம் தரத்திலே

மதிப்பெண் எடுத்து

மகிழ்ச்சியாத்தான் படிச்சேனே



ஆயிரத்து இருநூறுக்கு

ஆயிரத்து நூறெடுத்து

ஆசையாத்தான் மேலேபடிக்க

தொழிற்பயிற்சியில் சேர்ந்தேனே



பதினாறாயிரம் ரூபாக்கட்டி

பேரை பதிஞ்சுப் போனாரே அப்பா

தேர்வு வரும் வேளையிலே

ஒரு ஐநூறு ரூபா இல்லைன்னாரே



ஊரிலே குடிசை

பிரிச்சி
போட்டிருக்காம்

கைக்காசு அதுக்கே

சரியாயிடுச்சாம்



சித்தியைக் கேளுன்னாங்க

சித்தியோ பொட்டை

சிறுக்கிக்கு
எதுக்கு

மேல்படிப்பு என்றாக



படிக்கிற இடத்திலே

காசுக் கட்டலைனா

தேர்வுக்கு வராம

ஊருக்கே போன்னாங்க



ஊருக்குத் திரும்பியே

நானும்
உட்கார்ந்திருக்கேனே

புதிசா வேய்ஞ்ச ஓலை ஓட்டை

வழியாவது உதவி கிடைக்குமான்னு


காணக் கிடைக்காத பொக்கிஷம்


விண்ணை முட்டின

கரகோஷங்கள்

இது வரை

சாதிக்காததை


சாதித்தற்காக

சாதனையாளர்

பட்டத்திற்காக என் பெயர்

அறிவிக்கப்பட்டவுடன்


பரிசினைப் பெற்ற

மகிழ்ச்சியில்

முகமெங்கும் ஆயிரம்

விளக்குகளின் வெளிச்சம்


ஆரவாரங்கள்

அடங்கும் முன்

மெதுவாக பின்னோக்கி

பார்க்கின்றேன்


நீ எங்கே உருப்படப் போறே

எதற்கும்

லாயக்கில்லாதவனே

வெட்டிப் பயலே .......


ஆயிரம் அர்ச்சனைகளை

அதிகாலை முதல்

நடுநிசி வரை

தினமும் கேட்டே


புடம் போட்ட இரும்பாய்

மாறியுள்ளது

பூப்போன்ற

என் மனம்



ஓரிடத்தில் உபயோகமற்றவனாகவும்

வேறிடத்தில்

காணக் கிடைக்காத

பொக்கிஷமாக
வும் நான்

வெளிச்சத்தைத் தேடி


வெளிச்சத்தைத் தேடி


வெட்டவெளியில்


வெகு நாளாகத் தேடுகிறேன்


வேதனைத் தான் மிச்சம் .




இருள் சூழும் உலகில்


என்னையும் படைத்து


இவ்வுலகில் எனை


இறக்கியதன் காரணமறியேன்.




எனை சூழ்ந்த மனிதர்கள்


என் மேல் இரக்கங் கொண்டு


என் கைப் பற்றி வழி நடத்தும்


என் பயண தூரம் அறியேன் .




ஏழு வண்ணங்கொண்டதாம்


எழிற் வானவில் வானில்


எழும்போதெல்லாம்


என்னிடம் பகின்றென்ன பயன்.




அடுக்கடுக்காக நிறங்களை சொல்லி


ஆசையைத் தான் தூண்டுபவரே


ஆரேனும் அவ்வண்ணமதை நான்


அண்மையில் காண வழி சொல்வீரோ




தாயையும் தந்தையையும்


தரணியில் வாழும் மற்றோரையும்


தாமதமின்றி நான் காணும் நாள்


எந்நாளோ அறியேன் அறிவீரோ நீர்

முக வரியை முன்னெடுத்து வா

உன் வரவை எண்ணி


ஓரத்துப் பார்வையில்


ஈர மனதுடன்


ஒவ்வொரு நிமிடமும்


உனக்காகவே காத்திருக்கின்றேன்



உள்ளத்துப் பூக்கள்


உலா வரும் சமயங்களில்


உன் நினைவலைகளே


என்னுள் ஜீவனை


ஒளிர்விக்கின்றது



நீ இல்லாத சமயங்களிலும்


என்னுள் ரசவாத


மாற்றங்களை


நீ நிகழ்த்துகின்றாயே


நீ என்ன மந்திரவாதியா



உன் புன்னகைப் பூக்களை


என்னிடம் விட்டுச் சென்றதால்


என் புன்னகை வங்கியில்


சேமிப்பு அதிகமாகிவிட்டிருக்கின்றது



பற்று வரவு


இரண்டும் நிகழ்ந்தால் தானே


பரிவர்த்தனை முற்றுப் பெறும்


என் சிந்தாத சிரிப்புத்துளிகளை


சீக்கிரம் உன்னுள் பதிய வா



முற்றுப் பெறாத


என்பயணத்திற்கு


முற்றுப் புள்ளி வைக்க


முக வரியை முன்னெடுத்து வா