சித்திரக் கலாவே !!!


ஒரு பார்வை

பார்த்தாலே போதும்

உயிரே என்னாசை

யாவும் தீரும் !!

இமை என்ற திரையினை

மெல்ல விலக்கி

கனிவோடுப் பார்த்தால்

குறைந்தா போகும் ?

ஏன் இன்னும்

இந்த நாணம் ?

என்று விடுவாயோ

மலர் பாணம் !

என் மனம்

தினமும் துடிக்குது

நிதமும் உன்

பெயரையே செபிக்குது !

உள்மனம் உன்னிடம்

பேசத் துடிக்குது

உன் மௌனம் கண்டு

அது ஏங்கித்தவிக்குது !

சித்திரக் கலாவே !!!

செந்தமிழ் நிலாவே !!!

தேன்சுவைப் பலாவே !!!

நீ சேர்ந்து வா உலாவவே !!!