என் இனிய மனைவிக்கு

நினைத்துத் தான்

பார்க்கின்றேன் என்

வாழ்வில் உந்தன்

இனிய வரவை


நெகிழ்ச்சி யூட்டிய

ஒரு நாளில்

பலர் வாழ்த்த

நின் கரம் பற்றினேன்


அந்நாள் தொட்டு

இந்நாள் வரை

இணைந்து நடத்திய

இல்லறம் இன்பமே


ஏற்றமும் உண்டு

இறக்கமும் உண்டு

ஏறி இறங்காதது

அன்பு மட்டுமே


மழலையர் மடிமீது

களிப்புற விளையாடிட

இம்மகிழ்விற்கு நிகர்

ஈடேது இணையேது


என்னில் உன்னையும்

உன்னில் என்னையும்

கண்ட பின்

களிப்பிங்கே மிகுந்ததே


அயராத உன் அன்பில்

ஆடித்தான் போனேனடி

ஆதரவாய் நீயிருக்க

என்னுலகம் வேறேதடி


தோழியாய் தொடர்ந்தாய்

தாதியாகவும் ஆனாய்

தாயாகவும் பரிமளிக்க

உன்னால் மட்டுமே முடியுமடி


இத்தனையும் இயல்பாய்

இசைத்த உன்னை

நான் இதயத்தின்

உச்சத்தில் வைக்கவா


வாழ்க்கையின் மிச்சத்தில்

உனக்கு சேயாக

நான் மாறி நித்தமும்

சேவகம் புரிந்திடவா


என் இதயங்கவர்ந்த கள்ளி

என் வேண்டுகோளை அள்ளி

என்ன வேண்டுமென சொல்லி

என் கடன் தீர்ப்பாயடி துள்ளி

அடைக்கலம் தருவாயா !!



சொல்லிக் கொடுத்ததும்

சொல்ல மறந்ததும்

சோலை மனதிலே

சுமையாய்
நிக்குதையா


அள்ள நினைத்ததும்

அன்பை விதைத்ததும்

அல்லி மனதிலே

அம்பாய் பாய்ந்ததையா


சின்ன வயசினில்

சிட்டு மனசுக்குள்

சித்தெறும்பொன்னு

சிக்கித் தவிக்கிதையா


கள்ளச்சிரிப் பொன்னு

கன்னங்குழி தனில்

கதகளி யாடி

கரைசேர துடிக்குதையா


அந்திக் கருக்கையில்

அஞ்சி வருகையில்

அன்பே அருகையில்

அடைக்கலம் தருவாயா

தாயே வரமருள்வாயே

அம்மா என்றழைத்தாலே ஆனந்தமே

ஆண்டவன் எனக்களித்த அவதாரமே

இன்னல்கள் நிறைந்த அந்நாளில்

ஈன்றாலே எனை ஒரு திரு நாளில்


உலகினில் உன்னைப் போல் ஒருவருண்டோ? என

ஊக்கத்தால் எனை உயர்த்தியவள் அவளன்றோ ?

எந்திரமாய் எ
க்காக உழைத்தாளே

ஏணியாகி எனை உயர்த்தி தான் மகிழ்ந்தாளே


ஐயமின்றி வாழ வழி வகுத்தாளே

ஒற்றுமையாய் எந்நாளும் வாழ் என்றாளே

ஓடாக எனை அனு தினமும் காத்தாளே

ஔடதங்கள் கொடுத்து எனைப் பாதுகாத்தாளே


உடல் கொடுத்தாய் உயிர்க் கொடுத்தாய்

மொழிக் கொடுத்தாய் விழிக் கொடுத்தாய்

வாழ வழிக் கொடுத்தாய் --- அம்மா

எதைக் கொடுப்பேன் இன்று நானுனக்கு


பணம் தரவா பழம் தரவா

பொருள் தரவா புதுப் புடவைத்தான் தரவா

எனக்குத் தெரியும் என் அம்மா

என்னிடம் நீ எதிர்பார்ப்பது எதுவென்று


பொன்னல்ல புகழல்ல பொருளல்ல

ஓடும் இந்த எந்திர வாழ்வில்

ஒரு பொழுதாவது கனிவோடு

உன்னோடு நான் பேசுவேனா? என்று


உன் கண்ணின் இமையென எனைக் காத்தாயே

ஒரு பொழுதென்ன தாயே

ஓராயிரம் பொழுது உன்னிடம் பேச

நீ எனக்கு வரமருள்வாயே

சிரம் புறம் சாய்ந்ததே

ஓடும் வண்டியில்


ஓடி ஏறியபின்


உள்ளே செல்ல


மனமில்லையே


பொக்கை வாய்க்


கிழவ னங்கே


போதித்தாலும்


பேதையின் பார்வையில்


போதை யேறி


பேத
லித்ததே மனம்


உள்ளே செல்ல


ஆங்கே வந்த மேக நீர்


வேகமாக எனை உள்ளே


செல்லத் தூண்டியதே


பொக்கையும் கெகேவென


எனைக் கண்டு சிரித்ததே


என் சிரம் புறம் சாய்ந்ததே

கரைந்து போனேன் நான்

நீ செல்லும் போது


என் நினைவினையும்


எடுத்துச் சென்றாயே


நான் இங்குத் தனியே


நாளெல்லாம் உனையே


நினைக்கும் போதெல்லாம்


உணர்ந்தாயோ அங்கே


பின் எப்படி மேகம் கலைந்தது


மழை நின்றாலும்


கரைந்து போனேன் நான்


உன் நினைவினில்

முடியும் உன்னால் மட்டுமே

தோல்வியின் விளிம்பில்

தொட்டதெல்லாம்

துளிரவில்லையென

துவளுகின்றாயே

முகமெல்லாம் வாட்டம்

முடிவில்லாப் பயணம்

முடியுமாவென

கலங்குகின்றாயே

முகவாட்டம் களை

எறும்பைப் பார்

எங்கிருந்து வந்தது

எதையும் தாண்டும்

எதிர்ப்பாற்றலதற்கு

சிறிய தோல்விக்கே

சிதறிவிடாதே

சிறிய நம்பிக்கைப் பூவினை

சித்தத்தில் சேர்த்துவிடு

திரும்பிப் பார்

உனக்கு ஒப்பார்

ஒருவர் இருப்பார்

எனத் தெரியவில்லை

எனதருமை நண்பா

முன்னே
ப் பார்

முடியாதது ஏதுமில்லை

முடியும் உன்னால் மட்டுமே

முடிவுடன் தொடங்கிவிடு

முதலிடு நம்பிக்கையை

முழு உழைப்பையும் சிந்திவிடு

முடிவில் அறுவடை செய்வாய்

முதல் வெற்றியை

முன்னேறும் வழிதனை

முக்கிய செய்தியாய்

முழங்கிட்டேன்

முயன்றுப் பார்

முயற்சி திருவினையாக்கும்

தவக் கோலம்

ஓடும் வரை ஓடு

ஆடும் வரை ஆடு

பாடும் வரை பாடு

போகும் வரை ஓடு ஆடு பாடு


அழுதே பிறக்கும் மானிடா

அழுகப் போவதும் நீயடா

அழவைப்பார் உனை சிலரடா

அவரழுகப்போவதும் இம்மண்ணிலடா


மண்ணில் நிலைப்பதோ சிலகாலம்

அறியா மானிடர் புரிவதோ மர்மஜாலம்

வீணாக செல்வதோ பொற்காலம்

அவரென்றும் பெற முடியா தவக்கோலம்

திரும்பிப் பார்க்கிறேன்

அது ஒரு கனாக்காலம்

அன்று புத்தகங்களை

மட்டுமா சுமந்தேன்



நெஞ்சைத் தொட்டுச்சென்ற

நிழலானவளையும்

அல்லவா சுமந்தேன்



காலம் உருண்டது

கனவுகள் கலைந்தது

நீர்த்து போனதென் உறவுகள்



அதோ அங்கே சுமைகளாய்

தூசிகளுக்கு இடையே

புதைந்து கிடக்கிறது



புத்தகங்கள் மட்டுமல்ல

நிறைவேறாமல் போன

என் கனவுகளும் தான்



கானல் நீரானவளை

நினைக்கும் போதெல்லாமொரு

சன்னமான குரல் தடுக்கிறது



சன்னமான குரலுக்கிசைந்தே

சலனமின்றி ஓடுகிறதென்

சம்சார சாம்ராஜ்யம்

திறக்குமே அந்த சொர்க்கக் கதவு



பீடுநடை போடுதே என் மனம் - அன்பே

உனை நான் கண்ட மறு நிமிடம்

ஆற்றங்கரையோரம் நானமர்ந்த நேரம் - அன்பே

நீயின்றி என் மனம் கொண்டதே பெரும் பாரம்


பாரிஜாத வாசம் கூந்தலோரம் பேசும் - அன்பே

மின்னல் உந்தன் சிரிப்பில் மெய்மறந்து போகும்

உந்தன்விழியோரம்உருவாகும்புது ராகம்-அன்பே

கண நேரம் என் நெஞ்சில் அது சிந்து கவி பாடும்


என் ஈர விழியோரம் - அன்பே

உன் நினைவு என்றும் ஆடும்

உன் நினைவு மறையும் நேரம் - அன்பே

என் மூச்சும் நின்று போகும்


நாம் வாழும் காலமோ குறைவு - அன்பே

நமக்குத் தேவைதானா ஒரு பிரிவு

நாம் கொள்ள வேணும் மேலும் பரிவு - அன்பே

கொண்டால் திறக்குமே அந்த சொர்க்கக் கதவு

அன்பினை விதைப்போம்


வாழ்க்கை என்பது ஒரு தரம்

அதில் எதுவுமில்லை நிரந்தரம்

பிணக்கிருந்தால் பகை வளரும்

கணக்கிலடங்கா இடர் தொடரும்


அன்பு ஒன்றே சுகம் தரும்

அதுவே நட்புக்கு பாலமிடும்

ஒருவருக்கொருவர் உதவிடுவோம்

உண்மை இதனை உணர்ந்திடுவோம்


வாழ்வது எத்தனை நாளாயிருந்தாலும்

அத்தனை நாளும் அன்பினை விதைப்போம்

எத்தனை இடர் நமைத் தொடர்ந்தாலும்

பிரியோம் இணை பிரியோம் ஒரு நாளும்

ஓலை வீடு


ஓலை வீட்டில்

ஒன்பது ஓட்டைகள்

வீட்டின்உள்ளே

காய்ந்த மட்டைகள்


இவர்தம்சொத்தோ

கிழிந்த சட்டைகள்

என்று தணியும்

இவர்தம்வேட்கைகள்


வேலை கிடைத்தால்
எரியும் விறகுகள்
இல்லையேல் அடுப்பில்
துயிலும் பூனைகள்

காய்த்த மரம்

கல்லடி படும்

காய்ந்த கூட்டம்

சொல்லடி படும்


அடங்கி வாழ்ந்தோம்

பல தலை முறை

கிடைத்த தெல்லாம்

வெறுங் குறை


துடித்து எழுவோம்

இம் முறை

வெற்றிக் கொள்வோம்

இக் கயவரை

சித்திரக் கலாவே !!!


ஒரு பார்வை

பார்த்தாலே போதும்

உயிரே என்னாசை

யாவும் தீரும் !!

இமை என்ற திரையினை

மெல்ல விலக்கி

கனிவோடுப் பார்த்தால்

குறைந்தா போகும் ?

ஏன் இன்னும்

இந்த நாணம் ?

என்று விடுவாயோ

மலர் பாணம் !

என் மனம்

தினமும் துடிக்குது

நிதமும் உன்

பெயரையே செபிக்குது !

உள்மனம் உன்னிடம்

பேசத் துடிக்குது

உன் மௌனம் கண்டு

அது ஏங்கித்தவிக்குது !

சித்திரக் கலாவே !!!

செந்தமிழ் நிலாவே !!!

தேன்சுவைப் பலாவே !!!

நீ சேர்ந்து வா உலாவவே !!!