நிலாச் சோறு

இடுப்பினில் என்னைச் சுமந்தபடி

இரவினில் எழில் நிலவினைக் காட்டி

அதோ பார்  நிலவினில் பாட்டி 

வடை சுடுகிறாளென சோற்றினை வாயிலூட்டி 



வயிற்றுப் பசியினை நீக்கி எனையாளாக்கிய

என்னருமைத் தாயே அந்த நிலாச் சோறு

இயந்திர வாழ்க்கையில் இயங்கும்

குழந்தைகளுக்கு எட்டாச் சோறானது ஏன்?